search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் மனு"

    அரியலூரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில், காங்கிரஸ் கட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.

    மேலிடப் பார்வையாளரும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நோகாகிரண்யாதவ் கலந்து கொண்டு, புதிய உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டார்.

    மேலும் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாவட்ட அளவில் வட்டாரத் தலைவர்கள், நகரத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர் ஆகிய பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளை கட்சியினர் தொடங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், நகரத் தலைவர் எஸ்.எம்.சந்திரசேகர், செய்தித் தொடர்பாளர் மா.மு.சிவகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், பூண்டி சந்தானம்,

    வட்டார தலைவர்கள் பாலகிருஷ்ணன், சீனிவாசன், சரவணன், திருநாவுக்கரசு, கங்காதுரை, முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அரியலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி சிறப்புக் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர் நோகா கிரண்யாதவ் பேசிய காட்சி.

    ×